புகார் பெட்டி எதிரொலி

Update: 2022-08-30 14:17 GMT
திருவெண்ணெய்நல்லூர் ஆமூரில் வடிகால் வாய்க்கால் வசதி இல்லாததால் சாலை மற்றும் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். இது குறித்த படத்துடன் செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதை தொடர்ந்து அதிகாரிகள் அங்கு தற்காலிகமாக வாய்க்கால் அமைத்து மழை நீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்