தஞ்சையில் பெய்த மழையால் பூக்காரத்தெரு ரெயில்வே கீழ் பாலத்தில் மழை நீர் வடிவதற்கு வசதி இல்லாமல் மழை தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பூ வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழை தண்ணீர் வடிவதற்கு வசதியாக வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சை