நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி தேவன்குடி மேலத்தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த தெருவில் உள்ள அடிபம்பு கடந்த சில மாதங்களாக சேதமடைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் குடி நீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சேதமடைந்த அடி பம்பை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயராஜ் - தேவன்குடி