குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள்

Update: 2022-08-26 12:32 GMT
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் குமுளூர் பஞ்சாயத்தை சேர்ந்த
வைகை காலனி 3-வார்டு பகுதியில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்வது இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் சமைப்பதற்கும், தங்களின் அன்றாட தேவைக்கும் குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்