அண்மைக் காலமாக ஏராளமான புதிய அரசு பஸ்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இருப்பினும் ஏற்கனவே உள்ள பழைய அரசு டவுன் பஸ்கள் சரியாக பராமரிக்கப்படாமல் இருப்பதால் ஆங்காங்கே பழுதாவதும், கட்டுப்பாட்டை மீறி சாலை யோரம் கால்வாய்களில் பாய்வதும், தடுப்புச்சுவர்களில் மோதுவதும், டயர் பஞ்சராவதுமாக உள்ளன. எனவே பழைய அரசு டவுன் பஸ்களை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.துரை, வேலூர்.