வேலூர் மெமு ரெயிலை சென்னை வரை நீட்டிக்க வேண்டும்

Update: 2023-05-14 17:24 GMT

வேலூரில் இருந்து அரக்கோணம் வரை மெமு ரெயில் தினமும் 3 முறை சென்று வருகிறது. அந்த ரெயிலுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வேலூரில் இருந்து அரக்கோணம் வரும் ரெயில், அங்குள்ள 7-வது நடைமேடையில் மேற்குமுனையில் நிற்கும். அந்த ரெயிலில் இருந்து இறங்கும் பலர் சென்னை ரெயிலை பிடிப்பதற்காக இரு நடை மேம்பாலத்தில் ஏறி மற்றொரு நடைமேடைக்கு செல்கிறார்கள். பயணிகள் நடைமேடையில் நடந்து செல்லவும், நடை மேம்பாலத்தில் ஏறி இறங்கவும் அவதிப்படுகிறார்கள். எனவே இந்த மெமு ரெயிலை சென்னை வரை நீட்டிக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கதிர்வேல், குன்னத்தூர். 

மேலும் செய்திகள்