போக்குவரத்து நெரிசல்

Update: 2023-07-09 12:58 GMT

பாணாவரம் பகுதியில் வியாழக்கிழமை அன்று வாரச்சந்தைக்கென இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் வாரச்சந்தை கடைகளை அமைக்காமல் பல வியாபாரிகள் அங்குள்ள பாணாவரம் சாலையோரம் வாரச்சந்தை கடைகளை அமைப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த வழியாக பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் சரியான நேரத்துக்கு செல்ல முடியவில்லை. வாரச்சந்தைக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் கடைகளை வைக்க அறிவுறுத்த வேண்டும், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ம.வெ.சுதாகர், கூத்தம்பாக்கம். 

மேலும் செய்திகள்