ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மாலையில் பள்ளி முடிந்ததும் ஆற்காட்டில் இருந்து மேல்விஷாரம் வழியாக வேலூர் செல்லும் அரசு பஸ்சில் ஆபத்தை உணராமல் படிக்கட்டிலும், கம்பிகளில் ஏறி நின்றவாறும் பயணம் செய்கின்றனர். பஸ் செல்லும் பாதையில் அருகிலேயே மின்சார வயர்கள் செல்வதால் ஆபத்து ஏற்படும் சூழ்நிலையும், தவறிவிழும் நிலையும் உள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்க வேண்டும்.
-வெங்கட், மேல்விஷாரம்.