நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்

Update: 2022-08-29 11:24 GMT

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா லத்தேரியை அடுத்த ராஜா தோப்பில் இருந்து வேலூர் வரை தடம் எண்:எம் 2 எம் என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. அந்தப் பஸ் கொரோனா ஊரடங்கின்போது நிறுத்தப்பட்டது. ஆனால், அந்தப் பஸ்சை மீண்டும் இயக்கவில்லை. நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளி மாணவ-மாணவிகள் அரும்பாக்கம், கன்னிகாபுரம் மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து லத்தேரி வரை நடந்தே செல்கின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மீண்டும் இயக்க வேண்டும்.

-பொதுமக்கள், லத்தேரி. 

மேலும் செய்திகள்

பஸ் வசதி