காட்பாடி ரெயில் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள், நோயாளிகள் வந்து செல்கின்றனர். ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலையோரம் ஏராளமான ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆட்டோ டிரைவர்கள் பார்க்கிங் விதிகளை மீறுகின்றனர். ஆட்டோக்கள் ஆக்கிரமிப்பால் சொந்த வாகனங்களில் ரெயில் நிலையத்துக்கு வருவோரும், பயணிகள், நோயாளிகள் அவதிப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகமும், ரெயில்வேத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, வேலூர்.