கடலூர் முதுநகர் அடுத்த சுத்துக்குளம் பகுதியில் பிரதான சாலையோரம் ஆகாயத்தாமரைகள் நிறைந்த பள்ளம் உள்ளது. இரவு வேளைகளில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையோர பள்ளம் தெரியாமல் அதில் விழுந்து விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன் அதிகாரிகள் விரைந்து தடுப்புக்கட்டைகள் மற்றும் எச்சரிக்கை பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.