பயணிகள் நிழற்குடை இல்லை

Update: 2026-08-30 13:45 GMT

கோவை மாநகராட்சி 100-வது வார்டுக்கு உட்பட்ட ஈச்சனாரி விநாயகர் கோவில் அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு நிழற்குடையும் இருக்கிறது. அதற்கு எதிரே பொள்ளாச்சி செல்லும் பஸ்கள் நிற்கும் நிறுத்தம் உள்ளது. ஆனால் நிழற்குடை எதுவும் இல்லை. இதனால் அங்கு பஸ் ஏற வரும் பயணிகள் மழை, வெயிலின்போது ஒதுங்க இடமின்றி தவிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக முதியவர்கள், பெண்கள் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே அந்த இடத்திலும் நிழற்குடை அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்