கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பைபாஸ் பஸ் நிறுத்தத்தில் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் தொலைதூர பஸ்கள் எதுவும் நின்று செல்வதில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகள் அருகில் உள்ள டோல்கேட் மற்றும் உணவகங்களில் நிற்கும் போதுதான் இறங்கி ஏறுகின்றனர். இதனால் அவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே அரவக்குறிச்சி பைபாஸ் பஸ் நிறுத்தத்தில் அனைத்து அரசு பஸ்களும் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.