தேனி மாவட்டத்தில் போடி, தேவாரம், உத்தமபாளையம் வழித்தடங்களில் இரவு நேரத்தில் அரசு பஸ் வசதி இல்லை. இதனால் வேலை முடிந்து வீடு திரும்பும் பலர் அவதி அடைகின்றனர். அதோடு பஸ்சுக்காக பெண்கள், முதியோர்கள் நெடுநேரம் கால் கடுக்க காத்திருக்கின்றனர். எனவே இரவு நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.