மாணவர்களுக்கு பாதுகாப்பு

Update: 2026-08-23 14:17 GMT

சேலம் மாவட்டம் எம்.செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி ஒருவழிப்பாதையில் அமைந்துள்ளது. இந்த சிறிய ஒருவழிப்பாதையில் தற்போது மேச்சேரி மற்றும் மேட்டூர் செல்லும் விரைவு பஸ்கள் சென்று வருகின்றன. எனவே காலை, மாலை நேரங்களில் மாணவர்களுக்கு விபத்து அபாயம் ஏற்பட உள்ளதால் போக்குவரத்து போலீசார் போதுமான பாதுகாப்பு ஏற்படுகள் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி