பயணிகள் அவதி

Update: 2026-08-23 13:31 GMT

தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் கோணங்கிநாயகனஅள்ளி பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் அப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பஸ் நிறுத்தம் திறந்தவெளி சாக்கடையாக மாறி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. பஸ் பயணிகள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிறுத்தத்தில் கழிவுநீர் விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்

பஸ் வசதி