பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து செங்குணம் கைகாட்டி வழியா சிறுகுடல், கீழப்புலியூர் கிராமங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் அரசு நகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகீன்றன. பஸ் இல்லாத நேரங்களில் இப்பகுதி மக்கள் வாலிகண்டபுரம் வழியாக செல்லும் பஸ்களில் ஏறி செங்குணம் கைகாட்டிக்கு சென்று அங்கிருந்து பிற ஊர்களுக்கு செல்கின்றனர். மேலும் அனைத்து பஸ்களும் கைகாட்டி பகுதியில் நின்று செல்வதில்லை. இதனால் பஸ்சை நம்பி பயணம் செய்யும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே அனைத்து பஸ்களும் செங்குணம் கைகாட்டி பகுதியில் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.