நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2026-05-24 12:47 GMT

குமரி மாவட்டத்தின் பல முக்கிய பகுதிகளுக்கு நாகர்கோவிலில் இருந்து புதிதாக தாழ்தள அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் என்ஜின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. சாலையில் பஸ் செல்லும் சக வாகனங்களுக்கு பஸ் வருவதற்கான என்ஜின் சத்தம் கேட்பதில்லை. மேலும், இந்த பஸ்களில் இருசக்கர வாகனங்களுக்கு பொருத்தும் ஒலி எழுப்பியை(ஹாரன்) வைத்துள்ளனர். இதனால், இருசக்கர வாகனம் என நினைத்து சாலையில் செல்லும் சக வாகன ஓட்டிகள் வழிவிடும்போது இந்த பஸ் ஓசையின்றி கடந்து செல்லும்போது நிலை தடுமாறுகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே, இந்த பஸ்களில் அதற்கு ஏற்றவாறு ஹாரன்களை பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராசிக், கோட்டார்.

மேலும் செய்திகள்