பஸ்வசதி தேவை

Update: 2026-08-02 07:18 GMT

நாகர்கோவிலில் இருந்து அனந்தநகர் குருகுலம் சாலைக்கு ‘12 என்’ என்ற அரசு பஸ் மற்றும் தனியார் மினி பஸ்களும் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் கடந்த ஒரு ஆண்டாக இந்த பஸ்கள் இயப்படாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் தொழிலாளர்கள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்துகிருஷ்ணன், கோணம்.

மேலும் செய்திகள்