பொம்மிடி-திருப்பதி அரசு பஸ் இயக்கலாமே!

Update: 2026-05-10 14:00 GMT

பொம்மிடி பல்வேறு கிராமங்களின் மையப்பகுதியாக உள்ளது. முத்தம்பட்டி, கொண்டகரஅள்ளி, பையர்நத்தம், ஆர்.எம். நகர், வத்தல்மலை பகுதி மக்கள் தினமும் அத்தியாவசிய தேவைக்காக பொம்மிடிக்கு வந்து செல்கின்றனர். இங்கிருந்து மக்கள் சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பஸ், ரெயில் மூலம் சென்று வருகின்றனர். ஆனால் திருப்பதி கோவிலுக்கு செல்லும் மக்கள் பஸ் வசதி இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொம்மிடியில் இருந்து திருப்பதிக்கு நேரடியாக அரசு பஸ் இருக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்