பொம்மிடியில் அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனை உள்ளது. இதன் மூலம் 33 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. பொம்மிடி முதல் அய்யம்பட்டி, தாளநத்தம் வரை தடம் எண்-19 டவுன் பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ்சை கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தி விட்டனர். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் அதே வழியில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.