லாரிகளால் போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2026-05-03 13:15 GMT

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் ஏராளமான லாரிகள் நிறுத்தப்படுகின்றன. குறிப்பாக கர்நாடக மற்றும் வட மாநிலங்களில் இருந்து வரக்கூடிய லாரிகளும், அதே போல கர்நாடகா மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் லாரிகளும் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. பல நேரங்களில் விபத்துகளும் நடந்து வருகின்றன. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட காரணமாக உள்ளன. எனவே சுங்கச்சாவடி அருகில் லாரிகளை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்