தர்மபுரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்களை அதிக வேகமாக ஓட்டிச் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதேபோல் விதிகளை மீறி சாலைகளில் ஒருவழிப்பாதையில் எதிர்புறமாக வாகனங்களில் செல்பவர்களால் அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. இதேபோல் ஆட்டோக்களை அதிவேகமாக ஓட்டுவது, சாலைகளில் ஆங்காங்கே திடீரென நிறுத்துவது விபத்து அபாயம் அதிகரிக்க காரணமாக உள்ளது. இந்த விதிமீறல்களை தடுக்க ஆங்காங்கே வேகத்தடை அமைத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.