சாலையை அடைத்து நிறுத்தும் வாகனங்கள்

Update: 2026-03-08 12:55 GMT

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தை ஒட்டி நகராட்சி அலுவலகம் உள்ளது. இதே வளாகத்தில் அம்மா உணவகமும் உள்ளது. நகராட்சி அலுவலக சுற்றுச்சுவரை ஒட்டி இரவு நேரத்தில் முழுக்க முழுக்க அசைவ உணவுகளை விற்கும் தள்ளுவண்டி கடைகள் நிறைய உள்ளன. இந்த கடைகளில் இரவு நேரங்களில் அசைவ, துரித உணவுகளை விரும்பி சாப்பிட வருவோர் புதிய பஸ் நிலையம்-நான்குரோடு பிரதான சாலையை அடைத்தவாறு தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை தடுத்து முறைப்படுத்தவேண்டும்.

மேலும் செய்திகள்