கிருஷ்ணகிரி பழைய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் 5 ரோடு ரவுண்டானாவை சுற்றி உள்ள பஸ் நிறுத்தங்களில் நீண்ட நேரம் நிறுத்தி பயணிகளை ஏற்றுகிறார்கள். இதனால் சிக்னல் உள்ள 5 ரோடு ரவுண்டானா பகுதி கடுமையான போக்குவரத்து நெரிசலை சந்திக்கின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். 10 நிமிடங்களுக்கும் மேலாக பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே போக்குவரதது போலீசார் அந்த பகுதியில் பஸ்களை நீண்ட நேரம் நிறுத்தாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.