சென்னை பெருங்குடி புழுதிவாக்கம், பாலாஜி நகர் பிரதான சாலையில் ஏராளமான கடைகள் நிறைந்த சாலை. இந்த சாலையில் அதிகமான வாகனங்கள் வந்து செல்லும். அந்த சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளன. இதானல் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். சில சமயங்களில் விபத்துகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போக்குவரத்துக்கு இடையூறான பள்ளங்களை சீரமைத்து தரவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.