சேலம் சன்னியாசிகுண்டு மெயின் ரோட்டில் கோவிந்த சாமி நகர் உள்ளது. இந்த பகுதிக்கு செல்லும் வழியில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பெயர் பலகை சேதமாகி சாய்ந்து கிடக்கிறது. இதனால் புதிதாக அப்பகுதிக்கு வருபவர்கள் கடும் சிரமப்படுகிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கோவிந்தசாமி நகர் பெயர் பலகையை சீரமைக்க வேண்டும்.