மரக்காணம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு திண்டிவனத்தில் இருந்து போதுமான அளவுக்கு பஸ் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மேற்கண்ட பகுதிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.