கூடுதல் பஸ் வசதி வேண்டும்

Update: 2026-01-11 16:12 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி செல்ல காலை நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லை. இதனால் அவ்வழியே பயணிக்கும் கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், மற்றும் சிகிச்சைக்கு செல்லும் முதியோர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் செல்லும் இடங்களிற்கு குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்