குமுளி, கம்பம் பகுதிகளில் இருந்து கோவை, திருச்செந்தூர், ஈரோடு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் உத்தமபாளையம் பஸ் நிலையத்துக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாகவே சென்றுவிடுகின்றன. இதனால் வெளியூர்களுக்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே வெளியூர் செல்லும் அரசு பஸ்கள் உத்தமபாளையம் பஸ் நிலையம் வழியாக செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.