ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கோவிலுக்கு செல்லும் சாலைகளில் இருபுறங்களிலும் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பக்தர்களின் சிரமத்தை கருதில் கொண்டு சாலையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.