கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

Update: 2026-02-15 16:22 GMT

கரூரில் இருந்து வெடிக்காரன்பட்டி, தாளப்பட்டி, நெஞ்சமாகூடலூர் வழியாக ஈசநத்தத்திற்கு குறைந்த அளவிலான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்றுவர பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இதனால் அவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்