ஊட்டியில் இருந்து கோத்தகிரிக்கும், கோத்தகிரியில் இருந்து ஊட்டிக்கும் போதிய பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் குறைந்த எண்ணிக்கையிலான அனைத்து பஸ்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக சீசன் காலங்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கிறது. எனவே அந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் முன்வர வேண்டும்.