கோத்தகிரியில் இருந்து மிளிதேன் செல்லும் சாலையில் தனியார் ஆஸ்பத்திரி அருகே குறுகலான இடத்தில் ஆபத்தான வளைவு உள்ளது. இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த இடத்தில் எச்சரிக்கை பலகை வைத்தனர். ஆனால் அந்த பலகை தற்போது சரிந்து கிடக்கிறது. விபத்துகள் ஏற்படுவதை தடுக்க அமைக்கப்பட்ட எச்சரிக்கை பலகையே, விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் காணப்படுகிறது. எனவே அந்த எச்சரிக்கை பலகையை சரி செய்து மீண்டும் நிறுவ வேண்டும்.