ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடைகளுக்கு தேவையான தீவனப் புல்களை லாரிகளில் ஏற்றி வந்து விற்பனை செய்து வருகின்றனர். அதிக லாபத்திற்காக லாரிகளில் உயரமாகவும், விதிமுறைகளை மீறி அதிக நீளத்திற்கும் தீவன புல்களை ஏற்றி வருகின்றனர். இதன் காரணமாக பிற வாகனங்கள் இந்த லாரிகளை முந்திச் செல்ல இயலுவதில்லை. இதனால் வாகன ஓட்டுகள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் சிறு சிறு விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.