திருவையாறு பகுதி கோனேரிராஜபுரம் கிராமத்தில் அரிசி ஆலை அருகே சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள வேகத்தடையில் வெள்ளைகோடுகள் வரையப்படவில்லை. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள வேகத்தடையில் வெள்ளை நிற கோடுகள் வரைந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.