பழுதான போக்குவரத்து சிக்னல்

Update: 2025-11-16 10:53 GMT

துடியலூர் அருகே தொப்பம்பட்டியில் போக்குவரத்து சிக்னல் உள்ளது. இது கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பழுதாகி கிடக்கிறது. இதன் காரணமாக அந்த வழியே வாகனங்கள் தாறுமாறாக இயக்கப்படுகின்றன. போக்குவரத்து ேபாலீசாேரா, மாநகராட்சியோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அங்கு சாலையை கடந்து செல்ல மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் கடும் அவதிப்படுகிறார்கள். சிறு, சிறு விபத்துகளும் நடைபெற்று வருகின்றன. எனவே உடனடியாக அந்த போக்குவரத்து சிக்னலை சரி செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்