போக்குவரத்து இடையூறு

Update: 2025-11-16 07:33 GMT

கிருஷ்ணன்கோவிலில் இருந்து அறுகுவிளை செல்லும் பிரதான சாலையில் வடக்குரத வீதி உள்ளது. இந்த வடக்குரத வீதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சிலர் கனரக வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இப்பகுதியில் சாலையோரத்தில் போக்குவரத்து இடையூறாக கனரக வாகனங்களை நிறுத்தாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ், நாகர்கோவில். 

மேலும் செய்திகள்