அரூர் கச்சேரி மேட்டில் தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், அரூர் நகருக்குள் செல்லும் வழி என நான்கு சாலை சந்திப்பு உள்ளது. இங்கு வழிகாட்டி பெயர் பலகை எதுவும் இல்லாததால் வெளி மாவட்டங்களில் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் கனரக வாகன டிரைவர்கள் வழி தெரியாமல் அரூர் நகருக்குள் செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் பெயர் பலகை அவசியம் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-குமார், அரூா்.