வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-11-02 13:02 GMT

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி போலீஸ் நிலையம் அருகே தாராபுரம் ரோட்டில் இருந்து எட்டியாக்கவுண்டனூர் செல்லும் சாலையில் சமீப காலமாக பள்ளப்பட்டிக்கு செல்லும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளுக்காக பெரிய அளவிலான குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சாலையில் ஆங்காங்கே பெரிய அளவிலான குழிகள் தோண்டப்பட்டுள்ளது. மழை பெய்யும் நேரங்களில் இந்த குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அந்த வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்