சூலூர் தாலுகா அரசூர் அருகே தென்னம்பாளையம் உள்ளது. இங்கு நீலாம்பூர் பகுதியில் இருந்து வரும் டவுன் பஸ்கள் தென்னம்பாளையம் பஸ் நிறுத்த பகுதிக்கு பதிலாக நால்ரோட்டிலேயே பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதன் காரணமாக பயணிகளும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அங்கு கணியூர் நோக்கி செல்லும் அனைத்து பஸ்களும் தென்னம்பாளையம் பஸ் நிறுத்த பகுதியிலேயே பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.