போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள்

Update: 2025-10-26 10:52 GMT

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை டி.பி.எஸ்.நகர் 2-வது சாலையில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும் கால்நடைகள் முட்ட செல்கின்றன. இவற்றால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்