பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2025-10-05 10:07 GMT

கோவை காந்திபுரம்-கோவைப்புதூர் வழித்தடத்தில் குனியமுத்தூர் வழியாக 160 சி மற்றும் பேரூர் வழியாக 160 ஆகிய எண் கொண்ட அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் திடீரென கடந்த 2 ஆண்டுகளாக அந்த பஸ்கள் இயக்கப்படவில்லை. இதுகுறித்து கேட்டால் ஊழியர்கள் பற்றாக்குறை என்று கூறுகின்றனர். அந்த பஸ்கள் இயக்கப்படாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் அவதிப்படுகிறார்கள். எனவே நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்