விழுப்புரம் -பொம்பூர் வழித்தடத்தில் செல்லும் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தருவதோடு, மாணவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.