திருவெண்ணெய்நல்லூர் அருகே மணக்குப்பத்தில் உள்ள பள்ளிக்கு மாணவர்கள் சென்று வர போதுமான அளவுக்கு பஸ் வசதி இல்லை. இதனால் அங்கு படித்து வரும் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு நடந்து சென்று வருவதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி திருக்கோவிலூர்- பெரியசெவலை வரை காலை மற்றும் மாலை வேளைகளில் போதுமான அளவுக்கு பஸ் வசதி ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.