எரியாத தெருவிளக்குகள்

Update: 2025-09-07 08:41 GMT

ராஜாக்கமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆடராவிளையில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வடக்குபுறம் குடிநீர் தொட்டி அருகில் அமைக்கப்பட்டுள்ள 4 மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகள் பழுதடைந்து கடந்த 3 மாதமாக எரியவில்லை. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த தெருவிளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகளை பொருத்தி எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்