கோவை பூ மார்க்கெட் பகுதியில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்த அங்கு இடம் உள்ளது. இதுவரை கட்டணமின்றி வாகனங்கள் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது தலா ரூ.10 வசூலிக்கின்றனர். இதனால் மார்க்கெட்டுக்கு வந்து செல்லும் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அங்கு இருசக்கர வாகனங்கள் நிறுத்த கட்டணம் விதித்த முடிவை மாநகராட்சி அதிகாரிகள் திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.