ரிஷிவந்தியம் ஊராட்சி ஈருடையாம்பட்டு தார் சாலையில் இருந்து பிரியும் சாலையானது சேதமடைந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. இவ்வழியாக தினமும் பள்ளி, கல்லூாி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் சென்று வருகின்றனர். ஏதேனும் விபத்து நிகழும் முன் அதிகாரிகள் சாலையில் உள்ள பள்ளத்தை சாி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.