பயணிகள் அவதி

Update: 2025-08-24 07:44 GMT

நாகர்கோவில்-மிடாலம் தடத்தில் இயங்கும் 7-7‘எப்’ பஸ் இரு வழித்தடங்களில் மொத்தம் 6 முறை இயக்கப்படுகின்றன. இந்த பஸ் திங்கள்நகர், குளச்சல் வழியாக எண் 7 என ஒரு வழித்தடத்திலும், மற்றொரு வழித்தடமாக திங்கள்நகர், திக்கணங்கோடு, கருங்கல் வழியாக 7 ‘எப்’ எனவும் இயக்கப்படுகிறது. இதில் பலமுறை இரு வழித்தடங்களுக்கும் தடம் எண் குறிப்பிடாமல் டிஜிட்டல் போர்டில் மிடாலம்-நாகர்கோவில் என பதிவிட்டு இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் மத்தியில் குழப்பம் ஏற்படுவதுடன், முதியோர்கள் பலர் வழித்தடம் மாறி பஸ்சில் ஏறி சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, எந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறதோ அதற்கான தடம் எண்ணை முறையாக டிஜிட்டல் போர்டில் குறிப்பிட்டு இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆகாஷ், கருங்கல்.

மேலும் செய்திகள்