திருவெண்ணெய்நல்லூர் கடைவீதியில் வாகன ஓட்டிகள் பெரும்பாலும் சாலையிலேயே தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு விபத்து நடக்கும் அபாயமும் உருவாகி உள்ளது. எனவே சாலையில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவதை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.